குட்நியூஸ்..20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு- அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு..!

2001-2002 முதல் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் ஓர் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது.அதாவது,2001-2002 கல்வியாண்டு (3 வது செமஸ்டர்) முதல் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வருகின்ற நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி,இன்று முதல் https://coe1.annauniv.edu/home/ என்ற அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,தேர்வு அட்டவணை, தேர்வு முறை, தேர்வு மையம் தொடர்பாக அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.