மக்களே ஒரு குட் நியூஸ்..! தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு..!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும், 23,443 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த  வகையில், தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும், 23,443 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ள நிலையில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13,551 பேர் கொரோனாவிலிருந்து நலம் பெற்றுள்ள நிலையில், 1,52,3348 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் ஒரே நாளில் 8,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.