குட் நியூஸ்.! இந்து திருமணத்தை மசூதியில் நடத்த அனுமதி வழங்கிய முஸ்லிம்கள்.!

  • கேரளாவில் பிந்து என்ற பெண்ணுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். 
  • அவரது பெண்ணுக்கு வரும் 19-ம் தேதி திருமணம் அங்குள்ள ஒரு மசூதியின் வளாகத்தில் கூடாரம் அமைத்து இந்து முறைப்படி நடைபெற உள்ளது.

கேரளாவில் திருவனந்தபுரத்தின் காயங்குளம் நகரில் உள்ள செருவாலியில் முஸ்லிம் ஜமாத்தினரின் பழங்கால மசூதி ஒன்றுள்ளது. இதன் அருகில் ஒரு வாடகை வீட்டில் உள்ள பிந்து என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் மாரடைப்பால் இறந்து விட்டார். இந்நிலையில், பிந்துவின் மகள் அஞ்சுவிற்கு அந்த பகுதியில் உள்ள சரத் சசி என்பவருடன் வரும் ஜனவரி 19-ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதால், ஏழ்மையின் காரணமாக மண்டபம் உள்ளிட்ட செலவுகள் பிந்துவால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அவருக்கு பழக்கமான அலூமூத்தில் என்ற முஸ்லிம் குடும்பத்தாரிடம் மகளின் திருமணம் உதவி குறித்து பிந்து கேட்டிருக்கிறார். பின்னர் அவர் அந்த மசூதி அறக்கட்டளையின் செயலாளராக உள்ள நிலையில், பிந்து குடும்பத்திற்கு உதவி வேண்டுமென்று மசூதியில் தொழுகைக்கு வந்தவர்களிடன் கோரிக்கையை வைத்துள்ளார்.

மேலும் பிந்துவின் நிலைமை கருதி அனைவரும் மசூதி வளாகத்தில் திருமணம் நடத்த அனுமதி வழங்கினர். இதனையடுத்து வரும் ஜனவரி 19-ம் அந்த மசூதியின் வளாகத்தில் கூடாரம் அமைத்து இந்து முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது. அம்மசூதி ஜமாத்தின் செயலாளரான அலூமூத் கூறுகையில், தற்போது நாடு முழுவதிலும் மத சூழல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் அதை தடுத்து நிறுத்தும் என நம்புகிறோம் என  கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்