குட் நியூஸ்.! தமிழகத்தில் ஒரே நாளில் 5,106 பேர் குணமடைந்தனர்.!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகம் முழுவதும் இன்று 45,888 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 17.82 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 46,714 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று மட்டும் 5,106 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,310 லிருந்து 1,07,416 ஆக அதிகரித்துள்ளது. இன்று குணமானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

இன்று மட்டும் 5,106 பேர் குணமடைந்தனர். இன்று மேலும் 69 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்தது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.