EPFO 8.50 சதவீத வட்டி விகிதத்தை மொத்தமாக சுமார் 19 கோடி பிஎஃப் பயனாளர்களின் கணக்குகளில் வரவு வைக்கலாம் என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக நாடு வீழ்ச்சியை சந்தித்த நிலையில், அண்மையில் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு நடப்பு நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.65 சதவிகிதத்திலிருந்து, 8.50 சதவீதமாக குறைத்தது. மேலும், 8.50% வட்டி விகிதத்தையும், 8.15 சதவீதம் மற்றும் 0.35 சதவீதம் என இரண்டு தவணைகளாக வழங்குவதாக தெரிவித்தது.
பொதுவாக நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களால் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தும் தொகை, பங்கு சந்தை, அரசு பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் என பல்வேறு இடங்களில், அரசு முதலீடு செய்யும். இதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதத்தை பயனாளர்களுக்கு வழங்கும். அந்த வகையில் நீண்ட கால அடிப்படையில் மேற்கொண்ட இந்த முதலீடுகள் காரணமாக, பங்கு சந்தை இறக்கத்தை சந்தித்தபோது எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை.
இதனையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம், இரு தவணைகளில் வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த முடிவை EPFO அமைப்பு மாற்றிக்கொண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஏனெனில் தற்போது சந்தை நிலவரங்கள் எதிர்பார்த்த வருமானத்தை விட அதிகம் கிடைக்கக் கூடிய வாய்ப்பை பெற்றுள்ளதாகவும், அதனால் EPFO 8.50 சதவீத வட்டி விகிதத்தை மொத்தமாக சுமார் 19 கோடி பிஎஃப் பயனாளர்களின் கணக்குகளில் வரவு வைக்கலாம் என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு. அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி…
Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர் உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி…
Gold Price : கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின்…
Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.…
Kerala Election 2024 : கேரளாவில் கடந்த முறை போல இந்த முறையும் மக்களவை தேர்தலில் தடம்பதிக்க காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து வருகிறது. நாட்டில் நாடாளுமன்ற…
Election2024: பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம். கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் மக்களவை தேர்தலின்…