34.4 C
Chennai
Friday, June 2, 2023

அவசரச் சட்டத்திற்கு ஆதரவு… அரவிந்த் கெஜ்ரிவால் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு.!

டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக...

கோகுல் ராஜ் கொலை வழக்கில் ஐகோர்ட் தீர்ப்புக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த தாயார்.!

கோகுல் ராஜ் கொலை வழக்கின் ஐகோர்ட் தீர்ப்புக்கு கண்ணீர்...

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு…வெயில் கொளுத்தும்…வானிலை மையம் அலர்ட்.!!

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு என்றும், வெப்ப நிலை இயல்பிலிருந்து...

விவசாயிகளுக்கு நற்செய்தி! இனி தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை.. தனி இயங்குதளம் உருவாக்கம்!

விவசாயிகள் பயிர்க்கடன், நிவாரணம் பெற ஏதுவாக ஒரே இணையதளத்தை உருவாக்கியது தமிழக அரசு.

விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் Grains எனும் புதிய இயங்குதளத்தை உருவாகியுள்ளது தமிழக அரசு. அதன்படி, உழவர் நலன் சார்ந்த திட்டங்கள் மூலம் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் (GRAINS) எனும் புதிய இயங்குதளத்தை தமிழ்நாடு அரசின் வேளாண்மை – உழவர் நலத்துறை உருவாக்கியுள்ளது. விவசாயிகள் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டியுள்ளதால் அவர்கள் சிரமத்தை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த இயங்குதளம் மூலம் பயிர்க்கடன், நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை, இயற்கை பேரிடர் நிவாரணம் என இனி எதற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஆதார் எண், நில விவரம், பயிர் சாகுபடி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து இந்த புதிய (GRAINS) or (GRAINS) எனும் இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் திட்டப் பயன்களை பெற தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டியிருப்பதால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாவதை தவிர்க்கவும், இதன் மூலம் அரசின் பயன்கள் சரியான பயனாளர்களை சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுக்கும் விவசாயிகளுக்குமான இடைவெளி குறைய இணையதளம் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.