வங்கி ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி – மத்திய அரசு ஒப்புதல்…!

வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், குடும்ப ஓய்வூதியத்தை, கடைசியாக பெற்ற சம்பளத்தில் 30 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பைக்கு 2 நாள் பயணம் மேற்கொண்ட,மத்திய நிதியமைச்சர் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.அதன்பின்னர்,ஸ்மார்ட் வங்கி முறைக்கான சீர்திருத்த கொள்கை ‘ஈஸ் 4.0 (EASE 4.0) திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து,பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.இதன்மூலம்,பொதுத்துறை வங்கி ஊழியர் ஒருவர் பெற்ற கடைசி சம்பளத்தில் 30 சதவீதத்தினை குடும்ப ஓய்வூதியமாக அவரது குடும்பத்தினர் பெற முடியும்.இதனால்,வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை அவரது குடும்பத்திற்கு கிடைக்கும். மேலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்களின் ஓய்வூதிய நிதிக்கு முதலாளிகளின் பங்களிப்பு தற்போதைய 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.
இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தகவல்களை நிதிச்சேவைகள் துறை செயலாளர் தேபசிங் பாண்டா, மும்பையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது நேற்று வெளியிட்டார். மத்திய அரசின் குடும்ப ஓய்வூதிய உயர்வு தொடர்பான அறிவிப்பால், ஆயிரக்கணக்கான பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்பங்கள் பயனடையும்.
இதுகுறித்து,இந்தியன் வங்கிகள் சங்கம் (IBA) வெங்கடாசலம் கூறியதாவது: “இந்த தீர்வுத் திட்டத்தின் கீழ், மறுபயன்பாட்டு நன்மைகளை மேம்படுத்துவதில் அக்கறை எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், 2010 க்குப் பிறகு வங்கிகளில் சேர்ந்த இளம் ஊழியர்களுக்கு, புதிய ஓய்வூதிய முறையில் நிர்வாகத்தின் பங்களிப்பு தற்போதைய 10 சதவீதத்திற்கு பதிலாக 14 சதவீதமாக இருக்கும்.
அதாவது நிதிக்கு வங்கியின் பங்களிப்பு தொகையில் 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும்,மூத்த ஊழியர்களுக்கு, பணிக்கொடை, ஓய்வூதியம், இடமாற்றம் மற்றும் விடுப்பு காப்பீட்டுத் தொகைகள் அதிகரிக்கும்.குறிப்பாக,குடும்ப ஓய்வூதியத்தின் அதிகரிப்பு, சேவையின் போது அல்லது ஓய்வுக்குப் பிறகு தங்கள் அன்புக்குரியவரை இழக்க நேரிடும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு இது பொருந்தும்”,என்று தெரிவித்தார்.

Recent Posts

பட்ஜெட் விலையில் 8ஜிபி ரேம்..6000mAh பேட்டரி..கலக்கும் சாம்சங் கேலக்ஸி F15 ஸ்மார்ட் போன்.!

Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…

26 mins ago

‘பவர்ப்ளேல விக்கெட் எடுக்க கத்துக்கணும்’- சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் !

Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…

35 mins ago

கோவை சரளாவுக்கு கட்டு கட்டாக பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்! காரணம் என்ன தெரியுமா?

M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…

52 mins ago

நாம் ஓட்டுப்போட்டு என்னவாகப்போகுது.? மாறும் நகர்ப்புற தேர்தல் மனநிலை.!

Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…

1 hour ago

21 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்! எந்த மாநிலத்தில் அதிக வாக்கு சதவீதம் அதிகம்?

Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…

1 hour ago

ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க! விஜய் ஆண்டனி வேதனை!

Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…

2 hours ago