குட் நியூஸ்.. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,909ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 567 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். மொத்தமாக 9,909 பேர் வீடுதிரும்பியதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 567 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 9,909 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 8,500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.