7th Pay Commission அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் தினசரி கொடுப்பனவு மற்றும் சம்பளத்தை மீண்டும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) மீண்டும் அதிகரிக்க உள்ளது.முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு தனது லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின் கீழ் டிஏவை உயர்த்தியது.குறிப்பாக, ஜூலை 2021 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் DA 17% லிருந்து 28% ஆக உயர்த்தப்பட்டது. இப்போது சமீபத்திய அறிக்கைகளின்படி, டிஏ(Daily allowance) மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அறிக்கைகளின் படி, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் எனத் தெரிகிறது.
இதற்கு முன்னர்,டிஏவானது ஜனவரி 2020 இல் 4% ஆகவும், பின்னர் ஜூன் 2020 இல் 3% ஆகவும், ஜனவரி 2021 இல் 4% ஆகவும் அதிகரிக்கப்பட்டது.மேலும், வெவ்வேறு பிரிவுகளுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு 1-3% அதிகரித்துள்ளது. X, Y மற்றும் Z போன்ற நகரங்களின் பிரிவுகளுக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு(HRA) வழங்கப்படும் என்று மத்திய அரசு முன்பு கூறியது.அதன்படி,தற்போது திருத்தத்திற்குப் பிறகு, X வகை நகரங்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு,அடிப்படை ஊதியத்தில் 27% ஆக இருக்கும். ஒய் வகை நகரங்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 18% மற்றும் Z வகை நகரங்களுக்கு, அடிப்படை ஊதியத்தில் 9% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நகரத்தின் மக்கள் தொகை 5 லட்சத்தை தாண்டினால், அது 2 வகையிலிருந்து ஒய் வகையாக மேம்படுத்தப்படும். அதாவது, 9% க்கு பதிலாக, 18% HRA அங்குள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும். 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் எக்ஸ் பிரிவில் அடங்கும். மூன்று பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச வீட்டு வாடகை கொடுப்பனவு ரூ. 5400, ரூ .3600 மற்றும் ரூ .1800 ஆகும். செலவினத் துறையின் படி, உதவித் தொகை 50%ஐ எட்டும்போது,X, Y மற்றும் Z நகரங்களுக்கு HRA 30%, 20%மற்றும் 10%ஆகக் குறைக்கப்படும்.
மேலும்,கொரோனா தொற்றுநோயால் தங்கள் குழந்தை கல்வி உதவித்தொகையை (CEA) கோர வாய்ப்பு கிடைக்காத மத்திய அரசு ஊழியர்கள் தற்போது அதைச் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.முன்னதாக, மத்திய அரசு ஊழியர்கள் முன்பு தங்கள் குழந்தைகளின் கல்விக்காக ஒவ்வொரு மாதமும் ரூ .2,250 CEA ஐப் பெறுவார்கள், ஆனால் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன, எனவே அரசாங்கம் CEA விருப்பத்தை நீக்கியது.தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன, எனவே மத்திய அரசு CEA ஐ சேகரிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி,ரூ.2,250 க்கு பதிலாக, மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தை கல்வி உதவித்தொகையை கோரிய பிறகு இரண்டு குழந்தைகளுக்கு மாதம் ரூ .4,500 பெறுவார்கள்.குறிப்பிடத்தக்க வகையில், இரண்டாவது குழந்தை இரட்டையராக இருந்தால், இரண்டு குழந்தைகளின் கல்விக்கும் ஒரே உதவித்தொகை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
IPL2024: லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…