27 ஆண்டுகளாக நாய்களை பாசமுடன் வளர்க்கும் நல் உள்ளம் கொண்ட பெண்மணி!

27 ஆண்டுகளாக நாய்களை பாசமுடன் வளர்க்கும் நல் உள்ளம் கொண்ட பெண்மணி.

இன்று பலரின் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் என்றால் அது நாயாக தான் இருக்கும். அந்த வகையில், மதுரையை சேர்ந்த, அலங்காநல்லூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி தெருவில் வசித்து வருபவர் புஷ்பம் என்ற பெண்மணி.

இவரது கணவர் மற்றும் பிள்ளைகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிற நிலையில், தனிமையில் வசித்து வரும் இவர், தெருவோரங்களில் வசித்து வரும் நாய்கள் அழைத்து வந்து அவைகளுக்கு உணவு மற்றும் இருப்பிடம் அமைத்து கொடுத்து பாசத்துடன் வளர்த்து வருகிறார். இவ்வாறு 15-க்கும் மேற்பட்ட நாய்களை பராமரிக்கும் இவர், அந்த நாய்கள் மரணிக்கும் தருவாயில் அவைகளுக்கு என்று உரிய இறுதிச்சடங்கும் செய்து வைக்கிறார்.

இந்த நாய்கள் குறித்து புஷ்பம் கூறுகையில், இவர் இத்தனை நாய்களை வளர்த்தும் ஒரு நாய்கூட யாரையும் தேவையில்லாமல் கடித்ததோ அல்லது துரத்தியதோ இல்லை எனக் கூறுகிறார். மேலும் இப்பகுதிக்கு யாராவது புதிதாக வந்தால், நாய்கள் அனைத்தும் ஒன்றுகூடி ஊரையே அழைத்து விடும் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.