பொய் பாலியல் புகாரில் தங்கக் கடத்தல் ராணி சொப்னா மீண்டும் கைது!

பொய் பாலியல் புகாரில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா தற்பொழுது மீண்டும் கைது செய்யப்பட்டு காணொளி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தியதற்காக  கைது செய்யப்பட்டவர் தான் சொப்னா. இவர் அமீரகத் பணியில் சேர்வதற்கு முன்பாக ஏர் இந்தியாவின் சாட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்பொழுது அந்த நிறுவனத்தில் ஊழல் நடப்பதாக ஷிபு என்பவர் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் செய்திருந்தார். இதனையடுத்து ஷிபுவுக்கு எதிராக சாட்சி நிறுவனத்தில் பணிபுரிந்த இளம் பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அங்கு பணிபுரிந்த மற்ற இளம் பெண்களும் சாட்சிக் கையெழுத்துப் போட்டு இருந்தனர். இதுகுறித்து திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில் இந்த பாலியல் புகார் பொய் புகார் எனவும், இதன் பின்னணியில் சொப்னா தான் செயல்பட்டு இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் விசாரணையை தொடங்கிய போலீசார் சொப்னா தான் குற்றவாளி என்பதை கண்டறிந்து திருவனந்தபுரம் சிறைக்கு சென்று சொப்னாவை கைது செய்துள்ளனர். பின் காணொளி மூலமாக திருவனந்தபுரம் குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் முன்பதாக ஆஜர் படுத்தியுள்ளனர். மேலும் அவரை பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வருகிற 22-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி கொடுத்துள்ளார்.

Rebekal

Recent Posts

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…

10 mins ago

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு.! 56 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை.!

JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…

13 mins ago

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை.!

Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…

14 mins ago

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…

1 hour ago

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

1 hour ago

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!

Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

2 hours ago