தங்கக் கடத்தல் – ஸ்வப்னாவிடம் வருமான வரித்துறை குறுக்கு விசாரண.!

தங்கக் கடத்தல் – ஸ்வப்னாவிடம் வருமான வரித்துறை குறுக்கு விசாரண.!

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக 4 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவான ஸ்வப்னா பெங்களூரில் இருப்பதாக என்ஐஏவிற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் அவரையும், சந்தீப் நாயரை கைது கைது செய்தனர் .

இதைத்தொடர்ந்து, கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தினர். பின்னர், நீதிமன்றம் ஸ்வப்னாவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிடப்பட்டது.

ஸ்வப்னாவை 10 நாள்கள் காவலில் எடுக்க என்ஐஏ மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை வருகின்ற 21-ஆம் தேதி வரை என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி கொடுத்தது.

இந்நிலையில் நேற்று விசாரிக்க அனுமதி அளித்த நிலையில் தற்போது இன்று கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவிடம் என்ஐஏ விசாரித்து வரும் நிலையில் வருமான வரித்துறையும் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube