பசும்பாலில் தங்கம் இருக்கிறது லோன் கொடுங்க சார்! நிதி நிறுவனத்தை அலறவிட்ட மனிதர்!

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ இந்திய நாடு கிருஷ்ணர் பூமி. ஆதலால் நாட்டு பசுமாடுகளை நாங்கள் தெய்வமாக மதிக்கிறோம். இனியும் மதிப்போம். குழந்தை தாய்ப்பாலுக்கு அடுத்து பசும்பாலை தான் குடிக்கிறார்கள். ஆதலால் பசுவதையை நாங்கள் எதிர்க்கிறோம்.
நாட்டு பசும் பாலில் தங்கம் கலந்து இருக்கிறது. அதனால் தான் நாட்டு பசும்பால் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. நாட்டு பசுவின் காம்பில் சூரியவெளிச்சம் படும்போது அது தங்கமாக மாறுகிறது.’ என சர்ச்சைக்கு உரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர் தனது இரு நாட்டு பசுமாடுகளை அழைத்து அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் மணப்புரம் தங்க நகை கடன் வழங்கும் ஸ்தாபனத்திற்கு சென்று மேற்கு வங்க பாஜக தலைவர் கூறியதை நினைவூட்டி தங்க நகை கடன் கேட்டுள்ளார். இந்த விவகாரம் அப்பகுதியை பரபரப்பாக்கியுள்ளது. நகை கடன் ஸ்தாபன அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.