மீண்டும் மீண்டும்..! கோ ஃபர்ஸ்ட் விமான சேவை மே 19 வரை ரத்து.!

திவாலாகும் நிலையில் இருக்கும் Go First விமான சேவை மே 19 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பண நெருக்கடியில் உள்ள கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் மே 19 ஆம் தேதி வரை அதன் அனைத்து விமானச் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில், மே 3 முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து விமானங்களையும் ரத்து செய்த விமான நிறுவனம் பின்னர் அது மே 9  அதன் பின் மே 12 வரை ரத்து செய்யப்பட்டது. இப்போது, மே 19 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இப்படி மீண்டும் மீண்டும் அந்நிறுவனம் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்து வருகிறது.

விமான பயணத்திற்கு முன்பதிவு செய்தவர்களின் முழுத்தொகையும் திரும்ப வழங்கப்படும் என்றும் விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று கோ ஃபர்ஸ்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.