கடவுள் அதிமுக பக்கம் தான் இருப்பார் – அமைச்சர் செல்லூர் ராஜு

தேர்தல் வந்துவிட்டதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேல் வாங்குவது மட்டுமல்ல, வேல் குத்த கூட செய்வார். அம்மனுக்கு தீ கூட மிதிப்பார். தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவு பேசுவார்.

அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை வாங்கி கீழே கொட்டியவர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் ஒருநாளும் முதல்வராக முடியாது. குங்குமம் கொடுத்தால் அழிப்பது, விபூதி கொடுத்தால் தூக்கி எறிவது போன்ற செயலை மக்களும் கடவுளும் ஏற்கமாட்டார்கள் என்று  தெரிவித்துள்ளார்.

மேலும், தைப்பூசத்திற்கு விடுமுறை, அனைத்து வயதினருக்கும் தேவையான நலத்திட்டங்களை செய்வதால் கடவுள் அதிமுக பக்கம் தான் இருப்பார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீண்டும் முதல்வராவார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தேர்தல் வந்துவிட்டதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேல் வாங்குவது மட்டுமல்ல, வேல் குத்த கூட செய்வார். அம்மனுக்கு தீ கூட மிதிப்பார். தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவு பேசுவார் என விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.