இந்திய கிரிக்கெட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்-முன்னாள் வீரர்கள் குமுறல் !

இந்திய கிரிக்கெட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்-முன்னாள் வீரர்கள் குமுறல் !

பிசிசிஐயின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியான டி கே ஜெயின் இரட்டை பதவி ஆதாயம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டிற்கு  நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியில் வேலை செய்து வருகிறார். இவ்வாறு இருக்கும் போது இந்திய சிமெண்ட்ஸில் துணைத் தலைவராக எப்படி இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்திய சிமெண்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறது. எனவே இது குறித்து ராகுல் டிராவிட் இரண்டு வாரத்தில் விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கங்குலி ஒரு பதிவு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “இந்திய கிரிக்கெட்டில் இரட்டை பதவி ஆதாயம் என்ற புதிய பிரச்சினை உருவாகியுள்ளது.இந்திய கிரிக்கெட்டை  கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் .ராகுல் டிராவிட் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து ஹர்பஜன் சிங் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் “இந்திய கிரிக்கெட் தற்போது எங்கு சென்று கொண்டிருக்கும் தெரியவில்லை ராகுல் டிராவிட்டை விட சிறந்த  நபர் இந்திய கிரிக்கெட்டில் இருக்க முடியாது. இது போன்ற  முன்னாள் வீரர்களுக்கு நோட்டீஸ் கொடுப்பதன் மூலம் அவர்களை அவமானப்படுத்துகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.  இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் ” என தெரிவித்தார்.

ஏற்கனவே இரட்டை பதவி ஆதாயம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி , சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோருக்கு நோட்டீஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube