மே 30 வரை விமானங்கள் ரத்து.! கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன் நிறுவனம் அறிவிப்பு…

கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன் நிறுவனம், இம்மாதம் 30ம் தேதி வரை தங்களது விமானங்களை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.

சில செயல்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், இதனால் ஏற்படும் சிரமத்திற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வரும் 28 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், கூடுதலாக இரண்டு நாட்கள் அதாவது 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.