6 கோடி அல்லது 2 கோடி கொடு – தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பல்!

6 கோடி அல்லது 2 கோடி கொடு என திருச்சியிலுள்ள தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பலிடமிருந்து சிறுவனை மீட்ட காவல்துறையினர்.

திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் கண்ணப்பனின் மகன் தான் 12 வயது சிறுவன் முத்தையா. இவன் நேற்று மாலை வீட்டுக்கு வெளியில் நின்று விளையாடிக்கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். சிறுவனை வெகுநேரமாக காணவில்லை என பெற்றோர்கள் தேட ஆரம்பித்த போது, தொழிலதிபரின் நம்பருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எடுத்து பேசிய போது, உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம் 6 கோடி பணத்தை கொடுத்துவிட்டு கூட்டி செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த தொழிலதிபர் மகனை விடுமாறு கெஞ்சியதுடன், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனவும் கூறியுள்ளார். எனவே அந்த கடத்தல் கும்பல் 2 கோடியாக குறைத்து கேட்டுள்ளது. உடனடியாக காவல்துறையினரின் உதவியை நாடிய தொழிலதிபர் இது குறித்து கூறியுள்ளார். பின் காவல்துறையினரின் வழிகாட்டுதல்படி அவர்கள் அழைத்த இடத்திற்கு செல்ல காவல்துறையினரும் சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு சென்று பார்த்தால் கடத்தப்பட்ட சிறுவன் காரில் இருந்துள்ளார், கடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர். சிறுவனை மீட்ட காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். கார் உரிமையாளர் யார் என்பதை அறிந்த போலீசார் அவரிடம் விசாரிக்க, தனது நண்பர் தான் காரை வாடகைக்கு வாங்கி சென்றதாக கூறியுள்ளார். யார் அந்த நண்பர் என்பது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Rebekal

Recent Posts

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

3 hours ago

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

11 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

12 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

14 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

15 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

15 hours ago