காதல் பிரிவால் விலையுயர்ந்த பைக்கை தீயிட்டு கொளுத்திய காதலி..!

காதல் பிரிவு காரணமாக தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் விலை மதிப்புள்ள பைக்கை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவர் உயிருக்கு உயிராக ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென காதலன் காதலை பிரேக் அப் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த காதலி தான் பரிசாக அளித்த பைக்கை கொளுத்தியுள்ளார். இந்த பைக்கின் விலை ரூ.28 லட்சம். விலையுயர்ந்த பைக்கை எரித்த சம்பவம் பார்க்கிங் பகுதியில் இருக்க கூடிய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நெருப்பின் வேகத்தால் அருகில் இருந்த மற்ற ஆறு பைக் வாகனங்களும் எரிந்துள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்துள்ளனர். மேலும், இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.