காய்கறி சந்தைகள் தயாராவதில் தாமாதம்! வியாபாரிகள் ஏமாற்றம்!

காய்கறி சந்தைகள் தயாராவதில் தாமாதம்! வியாபாரிகள் ஏமாற்றம்!

திருமழிசை சந்தை திறக்கப்படாத  காரணத்தால், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், இதுவரை 4825 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதிலும், சென்னையில் தான் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 2,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கோயம்பேடு சந்தை கொரோனா வைரஸ் காரணமாக, திருமழிசை பகுதிக்கு மாற்றப்படுவதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், இன்று முதல் திருமழிசையில் காய்கறி வியாபாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஓரிரு வியாபாரிகள் காய்கறிகளுடன் அங்கு வந்துள்ளனர். சந்தை திறக்கப்படாத  காரணத்தால், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். மேலும், வெளி மாநிலங்களில் இருந்து அனுமதியின்றி உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரிகளை போலீசார் எச்சரித்து, திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube