உங்கள் அன்பானவர்கள் நலனுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – சிம்ரன் வலியுறுத்தல்..!!

உங்கள் அன்பானவர்கள் நலனுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – சிம்ரன் வலியுறுத்தல்..!!

உங்கள் அன்பானவர்கள் நலனுக்காக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று நடிகை சிம்ரன் வலியுறுத்தியுள்ளார். 

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுகொண்டு வருகிறார்கள். சிலர் பயந்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தாமல் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் நடிகை சிம்ரன் நேற்று மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். அதனை தொடர்ந்து தனது ட்வீட்டர் பக்கத்தில் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தியுள்ளார். இதில் ” குழந்தைகளை தொற்று நோய்களில் இருந்து ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாக இருக்க ஒரு சிறந்த வழி தடுப்பூசி போட்டுக் கொள்வது. நான் எனக்கான முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன். உங்களைச் சுற்றியுள்ள உங்களின் அன்பானவர்களின் நன்மைக்காக நீங்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்” என்று வலிறுத்தியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube