மதுரையில் ஜூலை 15-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்!

மதுரையில் ஜூலை 15-ஆம் தேதி முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த முழு பொதுமுடக்கம் இன்றுடன் நிறைவடைகிறது.

இதன்காரணமாக, மதுரையில் மேலும் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், மதுரையில் ஜூலை மாதம் 15-ஆம் தேதி முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும் என தமிழக அரசு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.