எரிவாயு குழாய் திட்டம்: தமிழகத்தில் இந்த இடங்களில் நிலம் கையகப்படுத்தப்படும்.!

எரிவாயு திட்டத்திற்காக தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியிலும் நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கூந்தலூர், ஆசனுர் போன்ற கிராமங்கள் மற்றும் புதுச்சேரியில் வில்லியனுரில் கிராமத்திலும் எரிவாயு திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான கருத்துக்களை 21 நாட்களுக்குள் மக்கள் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்