இளம் வீரர்களுக்கு கங்குலி வாய்ப்பு கொடுப்பார்… இர்பான் பதான்.!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கங்குலியை பற்றி கூறியுள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் கடைசியாக 5 போட்டிகளில் போட்டிகள் விளையாடினேன் அதில் நான் அதிகமாக விக்கெட்களை வீழ்த்தி னேன், மேலும் ஒரு நாள் போட்டியில் அதிகமாக ரன்களை குவித்தேன் , ஆனால் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு எனக்கு காயம் ஏற்பட்டது அதனால் என்னால் விளையாட முடியவில்லை அதன் பிறகு அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து பேசிய இர்பான் பதான் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தற்போதைய கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலி கேப்டன்ஷிப் பற்றி பேசியுள்ளார், அதில் அவர் பேசியது கங்குலி கேப்டன்ஷி மிகவும் அருமையாக இருக்கும், அவர் அணியில் உள்ள அணைத்து வீரர்களையும் புரிந்து வைத்துக்கொள்வார்.

மேலும் இந்திய அணிக்குள் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார், மேலும் சரியாக வீரர்களை அழைத்து கருத்துக்களை வழங்கி மறுவாய்ப்பு வழங்குவார், பல கிரிக்கெட் வீரர்களை நட்சத்திர வீரராக மாற்றியுள்ளார், இதனால் அவர் இந்தியாவின் சிறந்த கேப்டன் என்று நான் கூறுவேன் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.