கந்து வட்டி வசூலிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் -மாவட்ட எஸ்.பி..!

கந்து வட்டி வசூலிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் எச்சரித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் வலைகுளம் கண்மாயில் 15,000 பனைவிதைகள் நடும் விழாவில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், பொதுமக்கள் அதிக அளவில் பனைமரங்கள் நடவேண்டும். மேலும், கந்துவட்டி பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கந்து வட்டி வசூலிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்தார்.

author avatar
murugan