விநாயகர் சதூர்த்தி அன்று விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டதற்கு, விநாயகர் சிலையுடன் சிலை தயாரிப்பாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியாகிய நிலையில் வருகிற விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கிடையாது என்ற அறிவிப்பும் வெளியாகியது.
மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி இல்லை எனவும், வீட்டிலிருந்தபடியே பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது விநாயகர் சிலை தயாரிப்பு சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று சட்டப்பேரவைக்கு முன்பதாக கூடி விநாயகர் சிலையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் எனவும், ஏற்கனவே கடந்த வருடம் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடமும் இவ்வாறு இருந்தால் என்ன செய்வது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…
IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…