தமிழக அரசின் உத்தரவை மீறி தென்காசி, செங்கோட்டையில் இந்து முன்னணி நிர்வாகிகள் வைத்த விநாயகர் சிலை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
விநாயக சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்களை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஒரு சில இந்து அமைப்புகள் அரசின் உத்தரவை மீறி சிலைகளை வைக்க போவதாகவும், ஊர்வலம் நடத்த போவதாகவும் கூறியதை அடுத்து சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தடைகளை மீறி தென்காசி, செங்கோட்டையில் இந்து முன்னணி நிர்வாகிகளால் வைக்கப்பட்ட விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டதுடன் திருவண்ணாமலையில் செய்யாறு காந்தி சாலையில் அமைந்துள்ள பாதாள விநாயகர் கோவிலில் உத்தரவை மீறி விநாயகர் சிலைகளை வைத்ததற்காக 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்து முன்னணி நிர்வாகிகளால் அமைக்கப்பட்ட இரண்டரை அடி உயரமுள்ள விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டு, இந்து முன்னணியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…