விநாயகர் சதுர்த்தி தடையை நீக்க முடியாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை

விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு ஓன்று தொடரப்பட்டது. தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் ,விநாயகர் சிலையை நிறுவி வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது .மேலும்  விநாயகர் சிலை வைப்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.