விநாயகர் சதுர்த்தி 2021: சந்திரனை பார்க்க கூடாத நேரம்..!ஏன் பார்க்க கூடாது..!

விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்க கூடாத நேரங்கள் என்ன மற்றும்  ஏன் பார்க்கக்கூடாது என்றும் தெரிந்து கொள்ளலாம். 

விநாயகர் சதுர்த்தி 2021: சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகனான கணேசன் பிறந்தநாளை விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா, செப்டம்பர் 10 இன்று தொடங்கி, 10 நாட்களுக்குப் பிறகு ஆனந்த் சதுர்த்தசி அன்று முடிவடையும். இது கணேஷ் விசர்ஜன் நாள் என்றும் அழைக்கப்படுகிறது.

சதுர்த்தி திதி செப்டம்பர் 10, 2021 அன்று அதிகாலை 12:18 மணிக்கு தொடங்கி, 2021 செப்டம்பர் 10 அன்று இரவு 9:57 மணிக்கு முடிவடைகிறது. தொடக்க கடவுளாக கருதப்படும் விநாயகர் சடங்குகள் மூலம் கௌரவிக்கப்படுகிறார்.  இருப்பினும், இன்று பண்டிகையின் முதல் நாள் மற்றும் இந்த சிறப்பு மிகுந்த நாளில், நாம் வானத்தில் உள்ள சந்திரனைப் பார்க்கக்கூடாது.

நாம் ஏன் சந்திரனைப் பார்க்கக் கூடாது:                                                            ஒருவர் விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்று நம்பப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியன்று ஒருவர் சந்திரனைப் பார்த்தால், அவர்கள் திருட்டு குற்றச்சாட்டுகளால் சபிக்கப்படுவார்கள் மற்றும் சமூகத்தால் அவமதிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது.

புராணத்தின் படி, பகவான் கிருஷ்ணர் மித்ய தோஷத்திற்கு ஆளாகிவிட்டார். சியமந்தகா என்ற விலைமதிப்புள்ள நகையைத் திருடியதாக அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டது. பகவான் கிருஷ்ணரின் அவலநிலையைப் பார்த்து நாரத முனிவர், பத்ரபாத சுக்ல சதுர்த்தி நாளில் கிருஷ்ணர் சந்திரனைப் பார்த்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதனால் தான், அவர் மித்ய தோஷத்தால் சபிக்கப்பட்டுள்ளார். மித்ய தோஷத்திலிருந்து விடுபட விநாயகர் சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிக்குமாறு நாரத முனிவர் பகவான் கிருஷ்ணருக்கு அறிவுறுத்தினார்.

விநாயகர் சதுர்த்தி 2021: சந்திரன் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டிய நேரம்
திரிக்பஞ்சாங்கத்தின் படி, சதுர்த்தி திதி நிலவும் போது சந்திரனை பார்க்கக்கூடாது. எனவே, காலை 9:12 மணி முதல் இரவு 8:53 மணி வரை நீங்கள் சந்திரனைப் பார்க்கக்கூடாது. (காலம்: 11 மணி 41 நிமிடங்கள்)

ஒருவேளை நீங்கள் சந்திரனைப் பார்த்தால் என்ன செய்வது?
விநாயகர் சதுர்த்தியில் நீங்கள் சந்திரனைப் பார்த்தால், சாபத்திலிருந்து விடுபட பின்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்:

சிம்ஹா ப்ரசேனமாவதீத்ஸிம்ஹோ ஜாம்பவதா ஹதஹ் |
சுகுமாரகா மரோதிஸ்தவா ஹ்யேஷா ஸ்யமந்தகஹ் ||