டப்பிங் நீக்கம்…சர்ச்சை…….நடுவே…மக்கள் பாராட்டும் செயல்…!!!

கஜா புயலால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதீல் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகள் என அனைத்துமே இழந்து தவித்து வருகின்றனர்.இந்நிலையி மக்கள் அடிப்படை தேவையின்றி தவித்து,உதவிகோரி வருகின்றனர்.இவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினர் உதவி வருகின்றனர்.இந்த வரிசையில் தற்போது பாடகி சின்மையி இணைந்துள்ளார்.

பாடகி சின்மயி மீடுவில் கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.தமிழ் சினிமாவாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் சமீபத்தில்  டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.இது குறித்து தெரிவிக்கையில் இப்படி நடக்கும் என்று தெரிந்து தான் வாய் மூடி இருந்தேன் என்று தெரிவித்தார்.

மீடு சர்ச்சை …டப்பிங் நீக்கம் என தன்னுடைய வாழ்வில் இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் கஜா புயலால் இக்கட்டாக பாதிக்கப்பட்ட மக்களுக்குக்காக உதவ நிதி திரட்டும் வகையில் ஒரு பாடல் கச்சேரி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.அந்த கச்சேரி இன்று சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

 

https://twitter.com/Chinmayi/status/1065910177558216706

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment