சூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்!

தமிழசினிமாவில் முன்னணி இசையமைப்பாளரும், பிஸியான நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், அடுத்ததாக ஜெயில், சிவப்பு மஞ்சள் பச்சை, அடங்காதே, 100 % காதல் என பல படங்கள் ரிலீசுரிக்கு ரெடியாக உள்ளன.

இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் எழிலின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நிகிஷா படேல், ஈஷா ரேபா ஆகியோர் நடிக்கின்றனர்.

திகில் படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு ஆயிரம் ஜென்மங்கள் என பட தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பத்மப்ரியா ஆகியோர் நடிப்பில் திகில் படம் ஒன்று ரிலீசாகி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.