ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜூலை 26 – ஆகஸ்ட் 2 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 2 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தில் சென்னை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் நலன் கருதி சில தளர்வுகளை அரசு கொடுத்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்த மாதம் 26 ஆம் தேதி முதல் வருகின்ற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

author avatar
Rebekal