புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு – முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பேரிடர் ஆணையத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் கூறுகையில், புதுச்சேரியில் செவ்வாய்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துச்சேரியில் நாளை மறுநாள் காலை 6 மணி முதல் முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி என முதல்வர் நாராயணசாமி அறிவிதுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.