கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கேரளா முழுவதும் மே 8ஆம் தேதி முதல் 16ஆம தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கேரளாவில் 40 இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கேரளாவில் 5,565 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இருப்பினும் மற்ற மாநிலங்களை போல கேரளாவில் மருத்துவமனையில் படுக்கை வசதி பற்றாக்குறையே ஆக்சிஜன் பற்றாக்குறையே தற்பொழுது வரை ஏற்படவில்லை. இருப்பினும், சிறிய அளவிலான கட்டுப்பாடுகள் உடன் கூடிய ஊரடங்கு கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தவில்லை என காவல்துறையினர் சார்பில் கேரள முதல்வருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் வருகின்ற மே 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை அடுத்த 9 நாட்களுக்கு கேரளா முழுவதும் முழு ஊரடங்கு என அறிவித்துள்ளார்.
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…
Summer Holiday: தமிழகத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் இன்றைய 40-தாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
IPL2024: லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…