கொரோனா அதிகரிப்பால் இரண்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – மகாராஷ்டிரா அரசு அதிரடி!

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள இரண்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருட காலங்களாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் அண்மையில் சற்றே குறைந்து வந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகமாக இருந்த நேரத்தில், மகாராஷ்டிரா மாநிலம் தான் தொற்று அதிகம் கொண்ட மாநிலம் கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகரிக்க துவங்கிவிட்டது. தினமும் 4 முதல் 5 ஆயிரம் பேர் வரை புதிதாக தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பொது மக்கள் முக கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் ஊரடங்கு மீண்டும் சந்திக்க நேரிடும் எனவும் மகாராஷ்டிர முதல்-மந்திரி ஏற்கனவே எச்சரித்து இருந்த நிலையில் தற்பொழுது மகாராஷ்டிராவில் அதிகம் கொரோனா பாதிப்பு உள்ள இரண்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் அமராவதி மற்றும் யவத்மால் ஆகிய இரு மாவட்டங்களுக்கும் இரவு நேர பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமராவதியில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் காலை 7 மணி வரையிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அமராவதி மாவட்டத்தின் ஆட்சியர் லோகேஷ் அவர்கள், மக்கள் கொரோனா நடவடிக்கைகளை இனியாவது பின்பற்றுங்கள், இல்லையென்றால் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என கூறியுள்ளார்.

Rebekal

Recent Posts

என்னப்பா அப்படியே இருக்கு! மெழுகு அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் சிலை !!

 Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…

14 mins ago

அய்யா! பும்ரா பந்தை அடிச்சிட்டேன்! அசுதோஷ் சர்மா உற்சாக பேச்சு!

ஐபிஎல் 2024  : பும்ரா பந்தை அடித்ததன் மூலம் என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என அசுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்…

24 mins ago

அடடே.! பீட்ரூட்டை வைத்து ரசம் கூட செய்யலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

பீட்ரூட் ரசம் -பீட்ரூட் ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். பீட்ரூட்டை ஏதேனும் ஒரு வகையில் நம் உணவில்  தினமும்  சேர்த்து கொண்டோம் என்றால்  ரத்த…

28 mins ago

ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்… அதிகாலை நடந்த பரபரப்பு சம்பவம்!

Iran Israel Conflict: ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர்…

33 mins ago

மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கி சூடு.! பதற்றத்தில் வாக்காளர்கள்…

Election2024 : மணிப்பூர் வாக்குச்சாவடியில் மர்மநபர்கள் தூப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில்…

37 mins ago

வாக்களித்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான…

1 hour ago