மணிப்பூரில் ஆகஸ்ட்-31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு.!

மணிப்பூர் மாநிலத்தில் ஆகஸ்ட் -31 வரை முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகள் மத்தியில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊரடங்கு குறித்து முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் முழுமையான ஊரடங்கு ஆகஸ்ட்- 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரின் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் எண்ணிக்கை 1,800 ஐ கடந்துவிட்டன. இதற்கிடையில் 2,300 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர், அதே நேரத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.