மீண்டும் முழு ஊரடங்கு அமல்! திருப்பதியில் சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருப்பதியில் சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 1,963,239 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 40,739 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், 79104 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பதியில், சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்ட்டுள்ளதையடுத்து, அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.