சூரரை போற்று வெளியீட்டு தொகையிலிருந்து பல்வேறு திரைப்பட தொழில் சங்கங்களுக்கு ரூ. 1.5கோடி நிதியுதவி.!

சூரரை போற்று வெளியீட்டு தொகையிலிருந்து ரூ. 1.5கோடி பல்வேறு திரைப்பட தொழில் சங்கங்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களின் பேவரட்டாக மாறியுள்ளது. சமீபத்தில் சூரரை போற்று படத்தை அமேசான் பிரேமில் அக்டோபர் 30ம் தேதி வெளியிடவுள்ளதாகவும், சூரரை போற்று வெளியீட்டு தொகையில் வரும் பணத்தில் ஐந்து கோடி ரூபாயை முன்கள பணியாளர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் சூர்யா கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக வெளியீட்டு தொகையில் இருந்து ரூ. 1.5கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ளார். அதில் ரூ. 80லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கும், ரூ. 30 லட்சத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், ரூ. 20லட்சத்தை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் மற்றும் ரூ. 20லட்சத்தை இயக்குநர்கள் சங்கத்திற்கும் நிதியுதவியாக வழங்கியுள்ளார். சூர்யாவின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.