கே.ஜி.எஃப் 2′ படத்தின் வெறித்தனமான அப்டேட்…!

இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 208ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை இரண்டாம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ரவீனா டண்டன் , சஞ்சய் தத், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு எங்கு எப்போது என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெங்களூரில் படப்பிடிப்பு தொடங்கியது அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் யாஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வந்தது.

இந்த நிலையில் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியது ” படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் நாளை முதல் யாஷ் பங்கேற்றகேவுள்ளார். இந்த மாத இறுதிக்குள் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து படத்தை வெளியிட்டு பணிகளை உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.