செய்தியாளர் சந்திப்பில் மழை தூரல் விழ தொடங்கியதால் ஸ்லோவாக்கியா பிரதமருக்கு பிரான்ஸ் அதிபர் குடை பிடிப்பு!

செய்தியாளர் சந்திப்பில் மழை தூரல் விழ தொடங்கியதால் ஸ்லோவாக்கியா பிரதமருக்கு பிரான்ஸ் அதிபர் குடை பிடித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்லோவாக்கியாவின் பிரதமர் இகார் மாடோவிக் அவர்கள் அரசு  பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு சென்றுள்ள அவர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் உடனான சந்திப்பிற்கு பின்பதாக  குறித்து செய்தியாளர்களுக்கு பகிர்ந்துள்ளார். அப்பொழுது மழை தூரல் குறுக்கிட்டுள்ளது. எனவே அருகிலிருந்து பிரான்ஸ் நட்டு அதிபர் இம்மானுவேல் ஸ்லோவாக்கியா பிரதமருக்கு குடை பிடித்துள்ளார்.

உடனே அருகிலிருந்த உதவியாளர் இம்மானுவேலுக்கு குடை பிடித்துள்ளார். பின்பு மற்ற உதவியாளர் ஒருவர் இம்மானுவேலிடமிருந்த குடையை வாங்க முயற்சித்தாலும், அவர் கொடுக்க மறுத்துவிட்டு செய்தியாளர் சந்திப்பு முடியும் வரை ஸ்லோவாக்கியோ பிரதமர் இகாருக்கு குடை பிடித்துள்ளார், இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரது மனதையும் கவர்ந்துள்ளதுடன் அதிகம் சமூக வலைத்தளங்களில் பேசப்படும் ஒன்றாகவும் உள்ளது.

author avatar
Rebekal