பொது இடங்களில் இலவச WiFi வசதி!

மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை (WiFi) வசதி செய்து தரப்படும் என அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில், பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை (WiFi) வசதி செய்து தரப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment