நாளை முதல் அனைத்து மகளிருக்கும் நகரப்பேருந்துகளில் இலவச பயணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாளை முதல் அனைத்து மகளிருக்கும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

சென்னை தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

மேலும், மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் கையெழுத்துயிட்டு, உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்