கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் – மதுரை மாவட்ட ஆட்சியர்

கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தீவிர பரவலை கட்டுப்படுத்த மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்ப்பிணி பெண்கள், இந்த வைரஸ் நோயின் தாக்கதால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால், மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கோ அல்லது பரிசோதனைக்கோ செல்வதற்கு அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர், கர்ப்பிணிகளின் மருத்துவ ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.அதில் கட்டணமில்லா எண் – 1077 மற்றும் 04522546160, 9597176061 போன்ற தொலைபேசி எண்கள் இயங்கி வருகின்றது. இந்த எண்களுக்கு கர்ப்பிணிகள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என  கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.