கடந்த ஆட்சியில் வழங்கிய இலவச முக கவசங்கள் தரமற்றவை – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

பாதுகாப்பான முககவசங்களை வழங்காமல் நாடா துணியில் தயாரித்ததை வழங்கினார்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றசாட்டு.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கிய இலவச முக கவசங்கள் தரமற்றவை என்றும் பாதுகாப்பான முககவசங்களை வழங்காமல் நாடா துணியில் தயாரித்ததை வழங்கினார்கள் எனவும் குற்றசாட்டியுள்ளார்.

தரமற்ற முகக்கவசம் விநியோகம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தரமான இலவச முகக்கவசம் வழங்குவதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனியாரில் இலவச தடுப்பூசி முகாமை வரும் புதன்கிழமை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும், சட்டத்திற்கு புறம்பாக மதுபான பார்கள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் பார் நடத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்