1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்…! இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்…!

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  அவர்கள், தமிழகத்தில் உள்ள 1 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், புதிய மின் இணைப்புக்காக, தமிழகத்தில் 4.52 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்  இன்று தொடங்கி வைக்கவுள்ளார். முதற்கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு  புதிய மின் இணைப்புகள் வழங்குவதற்கான ஆணைகளை முதல்வர் இன்று கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.