தமிழகத்தில் இலவசமாக கொரோனா தடுப்பூசி – முதல்வர் பழனிசாமி

இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், துளிர்க்கும் நம்பிக்கை என்ற தலைப்பில் பிரபல தொலைக்காட்சி மற்றும் பேஸ்புக் நிறுவனம் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, தமிழகத்தில் விழா காலங்களில் தொற்று அதிகரிக்காமல் கட்டுக்குள் இருப்பது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என தெரிவித்தார்.

மேலும், கொரோனவால் இழந்த மாநிலத்தின் பொருளாதாரமும் மிகப்பெரிய அளவில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா காலத்தில் கூட இந்தியாவிலேயே அதிகப்படியான முதலீடுகள் தமிழகத்தில் ஈர்க்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்