புனேவில் நாலு கிலோ புல்லட் தாலி சேலஞ்ச் – வெற்றியாளருக்கு ராயல் என்ஃபீல்டு பைக் பரிசு!

புனேவில் உள்ள உணவகம் ஒன்றில் நான்கு கிலோ புல்லட் தாலி எனும் அசைவ உணவு தட்டை ஒரு மணி நேரத்தில் சாப்பிடுபவருக்கு ராயல் என்ஃபீல்டு பைக் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உணவகங்கள் தற்பொழுது களை இழந்து காணப்படுகிறது. இந்நிலையில், புனேவில் உள்ள ஒரு பிரபல உணவகம் ஆகிய சிவ்ராஜ் எனும் உணவகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே அருகே எனும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலின் உரிமையாளர் அதுல் என்பவர் களையிழந்த வியாபாரத்தை மீண்டும் புதுப்பிப்பதற்காக புல்லட் தாலி சேலஞ்ச் எனும் ஒரு புதுமையான போட்டியை அறிவித்துள்ளார். இதன்படி அசைவ உணவுகள் அடங்கிய நான்கு கிலோ மட்டன் மற்றும் மீன்கள் உடைய 12 வித உணவு அடங்கிய புல்லட் தாலி எனும் தட்டில் உள்ள உணவு முழுவதையும்ஒரு மணி நேரத்தில் சாப்பிடுபவர்களுக்கு 1.65 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

பல அசைவ உணவுகள் நிறைந்து காணப்படும் இந்த ஒரு தாலியின் விலை மட்டும் 2,500 ரூபாயாம். இந்நிலையில், இவரது இந்த அறிவிப்பை ஏற்று இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பலரும் உணவகத்தில் குவிந்துள்ளனர். அதன்படி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷோலாப்பூர் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய சோம்நாத் என்பவர் இந்த சேலஞ்ச்சில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளதாக ஹோட்டலின் உரிமையாளர் அதுல அவர்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal