உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்.!

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்.!

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் உடல்நலக்குறைவால் காலமானார்.

நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர், சில நாட்களுக்கு முன் இவரின்  மனைவி மீனாட்சி ஆச்சி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சமீபத்தில், திருச்சி தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை ஏ.ஆர். லட்சுமணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் சட்ட ஆணைய தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இருந்தவர்.  மேலும், பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube