இலங்கையின் முன்னாள் மந்திரி கொரோனாவால் உயிரிழப்பு..!

கொரோனாவால் இலங்கையின் முன்னாள் மந்திரி மங்கல சமரவீரா இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி மங்கல சமரவீரா(65) இன்று கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளார்.  ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் கொழும்புவில் உள்ள லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடுமையான கொரோனா தொற்று காரணமாக இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

மங்கல சமரவீரா கடந்த 2005 முதல் 2007 மற்றும் 2015 முதல் 2017 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்தவர். மேலும், தாராளவாத ஜனநாயக அரசியலின் ஆதரவாளரான இவர் பல்வேறு முக்கிய பதவிகள் வகித்தவர்.

கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் நிதி அமைச்சகம் முதற்கொண்டு பல முக்கிய துறைகளில் இவர் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கடந்த வருடம் அரசியலில் இருந்து விலகியுள்ளார்.