பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் முன்னாள் சபாநாயகர் சரண்ஜித் சிங்!

பஞ்சாப் முன்னாள் சபாநாயகர் சரண்ஜித் சிங் அத்வால் பாஜகவில் இணைந்தார்.

பஞ்சாப் சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் சரண்ஜித் சிங் அத்வால், டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். முன்னாள் சபாநாயகர் சரண்ஜித் சிங் அத்வால் சிரோமணி அகாலிதளத்தின் (எஸ்ஏடி) முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ஏப்ரல் 19- ஆம் அன்று ராஜினாமா செய்திருந்தார். 14-வது மக்களவையில் பில்லூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய அத்வால், இரண்டு முறை பஞ்சாப் சட்டசபையின் சபாநாயகராக பணியாற்றியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்